இந்தியாவில் காஞ்சிபுரம் நகரம் மிகவும் புராதன நகரம் முக்தி தரும் ஏழு நகரங்களில் அயோத்தியா, மதுரா,மாயா காசி, காஞ்சி, அவந்திகா,புரி ஆகிய நகரங்களில் முக்கியமான நகரமாகும். இந்நகரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. மகாகவி காளிதாசனால் நகரேஷு காஞ்சி என்று புகழப்பட்ட நகரமாகும். வைணவ திருத்தலங்களில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம் , திருமலை என்றால் திருவேங்கடம் பெருமாள் கோயில் என்றால் இத்திருக்கோயிலை குறிக்கும், இத்திருக்கோயிலில் திருக்கச்சி நம்பிகள் ஆலவட்ட கைங்கர்யம் செய்துள்ளார். ஸ்ரீபெருமாள் அவரிடம் தினமும் பேசுவார் , இத்திருக்கோயிலுக்கு ராமானுஜர் தினமும் திருமஞ்சன (தீர்த்தம்) கைங்கர்யம் செய்துள்ளார். இத்திருமஞ்சன தீர்த்தம் இத்திருக்கோயிலிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவிலிமேடு...